இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இராணுவ தளபதி இதனை அறிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதாத விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்காமையே இதற்கான காரணமாகும் என அவர் கூறினார்.
அதே நேரம், நாட்டில் வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என அரசாங்கம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வார இறுதியில் நாடு முடக்கப்படாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
எனினும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் கோரியுள்ளார்.