அடுத்து வரும் நீண்ட விடுமுறை நாட்களில் நுவரெலியா நகருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவு தலைவரும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவை அண்டிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இடைக்கிடையே அடையாளம் காணப்படுவதை கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹட்டன் போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதாகவும் இதனால் மாவட்டத்தில் இடைக்கிடையே பி சி ஆர் பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.