மகன் தாக்கியதில் தந்தை பலி!

IMG 20210424 WA0030
IMG 20210424 WA0030

குடும்பத் தகராறு காரணமாக மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் கலாசாலை வீதி- பாரதிபுரத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்தார்.

நேற்றிரவு வீட்டுக்கு மதுபோதையில் சென்ற குடும்பத்தலைவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார். வைத்தியசாலையில் பணியாற்றும் மனைவி வீடு திரும்பிய போது தகாத வார்த்தைகளால் தந்தை கதைத்ததால் ஆத்திரமடைந்த மகன் ஒருவர் தந்தையை தாக்கியுள்ளார்.

அத்துடன், மைத்துனர் ஒருவரும் அவரைத் தாக்கியுள்ளார்.

நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குடும்பத்தலைவர் அசைவற்றுக் கிடந்துள்ளார்.

காலையில் அவர் உயிரிழந்தமை தெரியவந்தததை அடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்