ஆசிரியர் தாக்கியதால் மாணவன் படுகாயம்!

WhatsApp Image 2021 04 24 at 13.18.31
WhatsApp Image 2021 04 24 at 13.18.31

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்விகற்றுவரும் 14 வயது மாணவன் ஒருவரை ஆசிரியை ஒருவர் மற்றும் அதிபர் தாக்கியதில் அடிகாயங்களுடன் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றுவரும் மாணவன் வகுப்பறை தலைவராக இருந்து வருவாதகவும் கடந்த 20 ஆம் திகதி பாடசாலையில் வகுப்பறையில் பாடத்திற்கான ஆசிரியர் வரும்போது அவருக்கு எழுந்து நின்று காலைவணக்கம் தெரிவிக்கவில்லை என அந்த ஆசிரியர் பிரம்பினால் அடித்தபோது பிரம்பு மாணவனின் கண்ணில் குத்தி காயமேற்பட்டது

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்த நிலையில் தாயார் பாடசாலைக்கு சென்று வினவிய நிலையில் அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்னர்.

இதனையடுத்து மாணவன் அடிகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ் காவல்துறை நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.