திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நோயாளர்கள் செல்ல தடை

b0452b97 8b4ee39f trincomalee central hospital 850x460 acf cropped
b0452b97 8b4ee39f trincomalee central hospital 850x460 acf cropped

திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களை அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய 5 தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களை பார்வையிடுவதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.