லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பலர்

Up Country Lindhula Hospital 2
Up Country Lindhula Hospital 2

பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லிந்துலை, ஹென்போல்ட் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் லிந்துலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆண்களும், 7 பெண்களும், ஒரு சிறுமியும் அடங்குவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது