கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் வல்லரசுகளுக்கு இடையில் மோதல் தளமல்ல – அஜித் நிவாட் கப்ரால்

unnamed 5
unnamed 5

கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைவாக செயற்படுகின்றபோது வல்லரசுக்களுக் இடையிலான மோதல் தளமாக ஒருபோதும் மாற்றமடையாது என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்திற்கான உத்தேச ஆணைக்குழு சட்டமூலமானது அவ்வாறே அமுலாகின்றபோது ரூபவ் உலகளவில் உள்ள சீன எதிர்ப்பு வாத வல்லாதிக்க சக்திகள் ஓரணியில் திரண்டு அதனை எதிர்க்கும். தமது எதிரியை முதலில் தாக்குதை விடவும்ரூபவ் எதிரியியன(சீனாவின்) நண்பனாக இருக்கும் இலங்கையையே அதிகளவில் தாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்கள். 

ஆகவே எதிர்காலத்தில் பேராபத்துள்ளதாக ஆளும் தரப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு துறைமுக நகரினது நிலப்பரப்பிற்கான உரித்தானது இலங்கைக்கே உரியதாகின்றது. அதுபற்றிய கவலைகள் தேவைக்கரியன. ஆரம்பத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்த துறைமுக நகரின் உரித்துரூபவ் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் 2014இல் ஒப்படைக்கப்பட்டது.

அதனையடுத்து தற்போது அந்த துறைமுக நகரின் அதிகாரத்தினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள ஆணைக்குழுவிடத்தில் கையளிக்கப்படுவதே நோக்கமகும். இதனால், நிலஉரித்து பறிபோகாது. அது இலங்கையிடமே காணப்படும்.

மேலும், இந்த துறைமுக நகரானது சீனாவின் முதலீடுகளுக்காக மட்டும் வழங்கப்படமாட்டாது. இங்கு சீனாவை விடவும் ஏனைய நாடுகளும் வருகை தந்து முதலீடுகளைச் மேற்கொள்ள முடியும். ஆகவே எந்தவொரு நாட்டிற்கும் துறைமுகநகரத்தில் முதலீடுகளைச் செய்ய முடியும். 

அவ்வாறான நிலையில், வல்லரசுகள் எவ்வாறு மோதல்களில் ஈடுபட முடியும்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய வளர்ச்சி வீதம் 2சதவீதமாக காணப்படுகின்றது. இந்த வளர்ச்சி வீதத்துடன் தொடர்ச்சியாக பயணிக்க முடியாது. ஆகவே துறைமுக நகரின் ஊடாக 15பில்லியன் டொலர்கள் வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்காக அனைத்து நாடுகளை முதலீடுகளைச் செய்வதற்கு கவர்ச்சியான வரிச்சலுகைகளை வழங்கவுள்ளோம். அதற்காகவே ஆணைக்குழு சட்டமூலத்தினை தயாரித்துள்ளோம் என்றார்.