வவுனியா அலகல்லு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்றுபேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
இன்று காலை குறித்த சிறுமி தனது சிறியதாயுடன் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வைத்தியரிடம் மருந்து எடுப்பதற்காக முச்சக்கரவண்டயில் சென்றுள்ளார். அலகல்கல்லு பகுதியில் முச்சக்கரவண்டி சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கிவீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.கல்குண்ணா மடுப்பகுதியை சேர்ந்த ஆக்சரசினி என்ற 9 வயது சிறுமியே மரணமடைந்துள்ளார்.
அவரது சிறியதாய் மற்றும், மற்றும் முச்சக்கரவண்டி சாரதி,மோட்டார் சைக்கிள்சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.