ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் பொருத்தமான நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை மேற்கோள் காட்டி ஆங்கில இணையத்தளமொன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை முதலில் 99 வருட குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் பின்னர் அதனை 198 வருடங்களாக மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் பொருத்தமான நேரத்தில் மறுபரிசீலனை செய்யும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.