வவுனியாவில் இன்று 18 பேருக்கு கொரோனா உறுதி !

300px Vavuniya District A3 copy
300px Vavuniya District A3 copy

வவுனியாவில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் கல்வியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 18 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவுகளின் அடிப்படையில் 18பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.