இந்தியாவில் கொவிட் 19 பரவல் தீவிரமடைந்துள்ளதால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி இதனை தெரிவித்தார்.
பருப்பு மற்றும் கிழங்கு உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.