நுவரெலியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா

202102181154452171 Tamil News Tamil News three month old baby death police investigation SECVPF
202102181154452171 Tamil News Tamil News three month old baby death police investigation SECVPF

நுவரெலியா- பொகவந்தலாவ கிவ் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார்.

இதில் 4மாத குழந்தை ஒன்றும் 7வயது சிறுவன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த அனைவரும், ஏற்கனவே தொற்றுக்குள்ளான குடும்பத்தின் தந்தையுடன், நெருங்கிய தொடர்பை பேணியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொற்றுக்குள்ளான தந்தை, பொகவந்தலாவ மோரா தோட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிசிச்சை பெறுவதாகவும் கூறப்படுகின்றது

அந்தவகையில் ஏனைய 8பேரும், சித்திரை புத்தாண்டுக்காக  அண்மையில் கொழும்புக்கு சென்று மீண்டும் தங்களது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே தொற்றாளர்கள் வசிக்கும் வீடு,  அவர்கள் சென்று வந்த இடங்கள் ஆகியன கண்டறியப்பட்டு, தோட்ட நிர்வாகத்தால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.