அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

166838 school holiday
166838 school holiday

நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக, நாட்டில் உள்ள சகல பாடசாலைகள், முன்பள்ளிகள், மற்றும் பிரிவெனா பாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.