கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இடவசதிகள் தொடர்பில் அச்சப்பட வேண்டாமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்தியசாலைகளில் கொவிட் 19 சிகிச்சைகளுக்காக வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
தேவை ஏற்படின் தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்களை கொவிட் 19 சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.