சிவராம் இல்லாமல் தமிழ்த்தேசிய அரசியல் தரகு அரசியலாகிவிட்டதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஆய்வாளருமான மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையானது, ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் ஓர் இருண்டநாள். தமிழர் பூகோள அரசியலை அன்றே கணித்து உருவாக்கிய தராக்கி சிவராம் இல்லாமல் தமிழ்த்தேசிய அரசியல் சில்லறை தரகுஅரசியல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.