முத்துஐயன்கட்டு இடதுகரையில் தீ விபத்து: இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம்: ஒருவருக்கு தீக்காயம் (update)!

received 296511378638582
received 296511378638582

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் இன்று (29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளதோடு மேலும்ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதுடன் கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் கடைஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினை தொடர்ந்து தீ பரவி இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றும் ஒரு கடை பகுதியளவில் சேமடடைந்துள்ளது .

இந்த தீவிபத்தின் போது முத்தையன் கட்டினை சேர்ந்த 72 அகவையுடை செல்லப்பா அரிராசசிங்கம் என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

தீ விபத்தினை கட்டுப்படுத்த படையினர் பிரதேச இளைஞர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு தண்ணீர் பாச்சியுள்ளதுடன் படையினர் தண்ணீர் பவுசர்கள் கொண்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த தீவிபத்து சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இதுவரை இல்லை எனவும் மிகவிரைவில் மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.