முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பாக 187 பேர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக இன்று வரை இலங்கையில் 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் காவல்துறையினரால் சிவில் உடையுடன் மேல் மாகாணத்தின் 110 காவல்துறை பிரிவுகளில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.