சீன பாதுகாப்பு அமைச்சர் கொழும்புக்கு மோட்டார் ஊர்வலத்தில் வருகை தந்து கொண்டிருந்தபோது பொரளை பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய பத்தரமுல்ல பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவரென காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.