மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதிக்கு பூட்டு

big 165616 Coronavirus 1 3
big 165616 Coronavirus 1 3

மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்கள் தங்கியிருந்து வரும் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்த விடுதி இன்று வெள்ளிக்கிழமை (30) மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

வெளிபிரதேசங்களில் இருந்து மாணவர்கள் கல்விகற்பதற்காக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசேதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கிருந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த விடுதியை தற்காலிகமாக மூடியுள்ளதாக அவர் தெரிவித்தார் .

இதேவேளை தொடர்ந்து எழுமாறாக பி..சிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது