ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம் – பத்மா குணரத்ன

z p07 Lanka
z p07 Lanka

தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து, இதுவரை காலமும் நபர்களுக்கு இடையில் பேணப்பட்டுவரும் ஒரு மீற்றர் சமூகஇடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதற்கமைய, தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூகஇடைவெளியை ஆகக்குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.