தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து, இதுவரை காலமும் நபர்களுக்கு இடையில் பேணப்பட்டுவரும் ஒரு மீற்றர் சமூகஇடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூகஇடைவெளியை ஆகக்குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.