ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி

hospital 8
hospital 8

நாடு பூராகவும் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் ராஜகிரிய, நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை உட்பட சகல வைத்தியசாலைகளிலும் கொவிட் சிகிச்சை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி கூறினார்.

முதற்கட்டத்தில் பொரள்ளை ஆயுர்வேத வைத்தியசாலை, நாவின்ன வைத்தியசாலை, பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை வழங்கப்படும். நாடு பூராகவும் 30 பிரதான ஆயுர்வேத வைத்தியசாலைகள் உள்ளன.