ஹோமாகம மற்றும் மாவனெல்ல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் ஹோமாகம – அத்துருகிரிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறுக்காக பயணித்த பெண் ஒருவரை மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் விபத்துக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு – கண்டி வீதியின் 99 ஆம் கட்டை பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய கடுகன்னாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.