மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

WhatsApp Image 2021 05 02 at 21.40.43
WhatsApp Image 2021 05 02 at 21.40.43

மட்டக்களப்பு வழைச்சேனை மற்றும் ஏறாவூர் ஆகிய காவல்துறை பிரிவில் உள்ள பிரதேசங்களில் நேற்று மற்றும் இன்று திங்கட்கிழமை (03)ஆகிய இரு நாட்களில் இரு ஆண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் காட்டுப்பகுதியில் விபுலானந்தாபுரம் ஏறாவூரைச் சேர்ந்த 57 வயதுடைய இராமலிங்கம் பாக்கியராசா என்பவரே சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (2) வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இவ்வாறு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேவேளை வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள முறுத்தானை கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இளையதம்பி அன்பழகன் என்வர் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை (03) அவரது வீட்டின் பின்பகுதியில் 100 மீற்றர் தூரம் கொண்ட காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது