மட்டக்களப்பில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்!

download 5
download 5

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள நெடியமடு, உன்னிச்சை, பெரிய புல்லுமலை, கோப்பாவௌி போன்ற கிராமங்களுக்குள் கடந்த பல நாட்களாக காட்டு யானைகள் ஊடுவி கிராம மக்களின் பயிர்களையும் பயன்தரும் மரங்களையும் அழித்து சேதப்படுத்திவருவதால் இப் பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்சார தடுப்பு வேலிகளை சில யானைகள் ஏறி மிதித்துக் கொண்டு விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை துவம்சம் செய்வதாகவும் இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.