மட்டக்களப்பில் மேலும் 5 பேருக்கு கொரோனா

IMG 2356
IMG 2356

மட்டக்களப்பு நகர்பகுதியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் 50 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்தபகுதியில் எழுமாறாக 120 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள 3 வீதிகளை சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு அந்த பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முடக்கப்பட்ட பகுதியிலுள்ளவர்களை வீடுவீடாக சுகாதார அதிகாரிகள் சென்று அவர்களை வரவழைத்து 50 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.