மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இந்த பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இதன்போது பொது மக்களுடன் நேரடி தொடர்புடைய அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
பொதுமக்களும் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முறையாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடப்பது தமக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பை தரும் என இதன்போது சுகாதார திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.