கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறாது பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்றோ ஒருநாள் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என வணிகப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் குமாரச்சந்திரன் சந்திரவதனன் தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகள் நேற்று (04) மாலை வெளியாகியிருந்ததன் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் குமாரச்சந்திரன் சந்திரவதனன் வணிகப்பிரிவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குமாரச்சந்திரன் சந்திரவதனன். நான் வணிகப்பிரிவிலே 3 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன். எனது இந்த வெற்றிக்கு காரணமான தாய் தந்தைக்கு முதலிலே நன்றி தெரிவிப்பதோடு எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது இறுதி இலக்காகிய பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் என்ற இலக்கோடு பயணிக்கின்றேன்.அத்தோடு மாணவர்களுக்கு நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறாது பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்றோ ஒருநாள் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்றும் தெரிவித்தார்.