யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 பேரும் கிளிநொச்சியில் 4 பேரும், வவுனியாவில் 9 பேரும் 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் 42 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொடிகாமத்தில் காவல் நிலைய உத்தியோகத்தருக்கும், வங்கி ஊழியருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கைதடியில் உள்ள அரச செயலகம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கோப்பாய் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்த இருவருக்கும் அச்சுவேலி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கு தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய இருவரில் ஒருவர் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரும் பல்கலைக்கழக மாணவனும் அடங்குகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.