மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. தேவிகா அபேரத்ன நேற்று (16) ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.