2,350 மில்லியன் ரூபா செலவில் யாழ் மாநகரசபைக் கட்டடம் – பிரதமரினால் அடிக்கல் நாட்டி வைப்பு

prime minister
prime minister

யாழ் மாநகரசபைக்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் இரண்டாம் முறையாக இன்றும் நாட்டப்பட்டது. 2,350 மில்லியன் ரூபா செலவில் மாநகரசபை கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள போதும், தற்போதைக்கு 750 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், இன்று காலையில் நகரப்பகுதிகளில் நடைபெறும் சில வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட பின்னர், அடிக்கல்லை நாட்டி வைத்தார். யாழ் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மேல்மாகாண, நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வட மாகாண அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.