கொழும்பு பெஸ்டியன் மாவத்தை, மாகும்புற, வவுனியா மற்றும் கடுவெல ஆகிய பிரதான பேருந்து நிலையங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுகின்ற பேருந்துகளை கண்டறிய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரல் கமாண்டர் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.
சுகாதார பரிந்துரைகளை மீறி பயணிக்கின்ற பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தினமும் பல பிரதேசங்களை உட்படுத்தி நடமாடும் பரிசோதகர்களை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.