யாழ்பாணத்தில் முகக்கவசம் அணியாது இருந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் , இதன்போது காவல்துறையினருடன் செல்ல மறுப்பு தெரிவித்த இளைஞர்களை காவல்துறையினர் பலவந்தமாக தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது முகக்கவசம் அணியாது இருப்பவர்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு இடம்பெற்று வருதுடன் அத்தகைய நபர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் , யாழ்பாணம் பகுதியில் காவல்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது முகக்கவசம் அணியாது இருந்த 42 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் காவல்துறையினருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றியதுடன் , அவர்களை காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்றிருந்தனர்.