கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்

166838 school holiday
166838 school holiday

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று (07) வரையில் நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் மூட தீர்மானிக்கப்பட்டிருந்து.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.