கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 326 கொவிட் 19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பகுதியில் 51 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.