வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் (கருங்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி) மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
இன்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.
இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்கமுடியவில்லை.
சம்பவம் தொடர்பாக கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
நீரினுள் மூழ்கிய நபரை மாலை 3மணியளவில் இருந்து 6மணிவரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரை மீட்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தனர்.
சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மாயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.