தேவைப்பட்டால் எதிர்காலத்தில் நாடு மூடப்படலாம் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே!

Sudarshani Fernandopulle
Sudarshani Fernandopulle

தேவைப்பட்டால், எதிர்காலத்தில் நாடு மூடப்படலாம் என தொற்று நோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்றவாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் மூடும் அதிகாரம் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.