இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு

sp
sp

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று தெரிவித்து இலங்கையில் இன, மதங்களுக்கிடையில் பதற்றத்தினை முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்படுத்த முயல்வதாக காணி மற்றும் காணி அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்து இன, மத மக்களும் இலங்கையை பௌத்த நாடு என ஏற்றுக்கொண்டுள்ள போதும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிப்பதற்கு பதிலாக ஜதார்த்தத்தினை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.