அரச சார்பற்ற அமைப்புக்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இந்த அரச சார்பற்ற அமைப்புக்கெள் பாதுகாப்பு அமைச்சிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் வெளிநாடுகளிலிருந்து பாரியளவிலான நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15 இற்கும் அதிகமான அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசில் பதிவு செய்யப்படாமல் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 1499 அரச சார்பற்ற அமைப்புக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.