கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

kaithu
kaithu

தலங்கம – மாலபே பகுதியில் மகிழுந்தில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த 4 கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பாதுக்க – கலகெதர பகுதியில் 8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.