உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்ய தடை

download 1 6
download 1 6

தரமானது என உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதும், விளம்பரம் செய்வதும் மோசடி நடவடிக்கையாகும் என ஆயுர்வேத வைத்திய சபை வலியுறுத்தியுள்ளது.

பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் இவ்வாறு மருந்துகளை விளம்பரம் செய்வது ஆயுர்வேத சட்டத்தின்படி குற்றமாகும்.

ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் தரமற்ற மருந்தை சமூக ஊடகங்கள் ஊடாக அல்லது ஏனைய பகிரங்க ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆயுர்வேத வைத்திய சபை குறிப்பிட்டுள்ளது.