அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் – திகாம்பரம் கோரிக்கை

திகாம்பரம் 756x420 1
திகாம்பரம் 756x420 1

மலையகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொவிட் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பெருந்தோட்டத்துறையில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மலையகத்தை பொருத்தமட்டில் நுவரெலியாவிலேயே அதிகளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை வருமானம் ஈட்ட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டியுள்ளது.

எனவே இம்மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.