இந்தியாவில் இரு வாரங்களுக்கு ஊரடங்கு

020f5bbd curfew
020f5bbd curfew

தமிழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஊரடங்கு காலப்பகுதியில் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தும் முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளையும், நாளை மறுதினமும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.