ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்திண தலைமையில் நடைபெறவிருந்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது மின்சார தடை ஏற்பட்டமையினால் சில நிமிட தாமதத்தின் பின்னர் கூட்டம் ஆரம்பமாகியது.
வவுனியாவில் மின்சார திருத்த வேலை வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மின் பிறப்பாக்கி வசதிகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருக்காமை பெரும் விசனத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இதுவரை காலமும் மின்சாரம் இன்றி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் இடம்பெறாத நிலையில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் முதன் முதலாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றமையினால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
வெப்பமான சூழல் மற்றும் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் பின்வரிசையில் இருந்தவர்குளுக்கு கேட்காத நிலைமையும் இதன்போது காணப்பட்டது.
புதிய அரசில் இடம்பெறும் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டபோதிலும் மின்பிற்ப்பாக்கி வசதியை மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்திருக்காமை திட்டமிட்டு செய்யப்பட்ட செயற்பாடா என கேள்வி எழுப்பப்படுகின்றது.