காணாமல் போனோருக்கு இறப்புச் சான்றிதழ்!!

Gota
Gota

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது காணமலாக்கப்பட்டவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் அவர்களுக்கான இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வது சிறப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது மீட்கப்பட்ட இரு தரப்பினரதும் உடல்கள் சிதைந்து காணப்பட்டதாகவும் இது தொடர்பில் இறந்தவர்களின் தாய்மார்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதனை தன்னால் விளங்கிக் கொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வது தான் சரியான தீர்வு என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.