ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜெயசூரியவினை நியமிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சஜித் பிரேமதாச தனக்கு கட்சியில் எந்வொரு பதவியும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனை ஐக்கிய பிக்கு முன்னணியின் செயலாளர் நிநியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது தொகுதிகளுக்குச் சென்று மக்கள் தொடர்பில் ஆராய்ந்து கட்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.