வெளிமாகாணத்தவர்களுக்கு தங்குமிடம் வழங்குவோருக்கு சட்டநடவடிக்கை!

download 38
download 38

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிமாகாணங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் வெளிமாகாணங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியிருப்பதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.