2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்றைய தினம் தமிழரசு கட்சி உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை ஆரம்பிக்கும் முகமாக நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்
முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நெருங்கி வரும் நிலையில் இராணுவத்தினரதும் புலனாய்வாளர்களினதும் நெருக்குவாரங்கள் அதிகரித்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை ஆரம்பிக்கும் முகமாக நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் பீற்றர் இளஞ்செழியன்
நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிர்நீத்த நந்திக்கடலில் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது