வவுனியா கொரோனா வைத்தியசாலைக்கு வவுனியா வர்த்தகர்களின் பங்களிப்பில் தண்ணீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் நேற்றையதினம் இரண்டு தண்ணீர்தாங்கிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்டசெயலாளர் சபர்ஜா, வர்த்தக சங்க தலைவர் சுஜன், செயலாளர் அம்பிகைபாகன் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.