வெசாக் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு கோரிக்கை

vesak 850x460 acf cropped
vesak 850x460 acf cropped

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் வெசாக் பூரணை தினத்தில் மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறிக்கையொன்றினை வெளியிட்டு இலங்கை வாழ் பௌத்த மக்களிடம் அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

விகாரைகள் மற்றும் வெளியிடங்களில் மக்களை ஒன்றுதிரட்டுதல், தானங்கள் வழங்குதல், வெசாக் அலங்கார தோரணைகளை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்த்து, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்