72 ரின் பியருடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது !

kaithu
kaithu

72 ரின் பியருடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தருமபுர காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்றத் இரகசிய தகவலுக்கமைய இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தருமபுரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் விற்பனைக்கு தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் காவற்துறையினர் வழங்கு தொடரவுள்ளனர்